Tuesday, September 22, 2009

மரபுக் கவிதை - 16



அருள் புரிவாய் கணநாதா!


கணநாதா கணநாதா! ஓம் கணநாதா கணநாதா!
கணநாதா கணநாதா! ஸ்ரீ கணநாதா கணநாதா!

அம்பிகை பாலா கணநாதா,
அபயமளிப்பாய் கணநாதா!
தும்பிக்கையை உடையவனே,
துயரம் போக்கிட அருள் புரிவாய்!

சரவணன் அண்ணா கணநாதா,
சரணம் அடைந்தோம் கணநாதா!
பரமனின் கணங்களின் அதிபதியே,
பகைவரை வென்றிட அருள் புரிவாய்!

தேவியின் மைந்தா கணநாதா,
தெம்பினை அளிப்பாய் கணநாதா!
தேவர்கள் போற்றும் தூயவனே,
தேசம் காத்திட அருள் புரிவாய்!
நன்றி: தினமலர் (ஈரோடு)
(22.01.2001)

No comments:

Post a Comment