Monday, September 28, 2009

உருவக கவிதை - 5



வெற்றி நிச்சயம்

பாரதம் வழிகாட்டுகிறது -
தர்மத்தின் வாழ்வுதனை
சூது கௌவும்
தர்மம் மறுபடி வெல்லும்.

அதிகாரப் பசியும்
ஆணவ அரசியலும்
தர்மத்தின் முன்பு
தவிடு பொடியாகும்.

மெல்லிய குழலிசை
மட்டுமல்ல,
போர்ப்பரணி கொட்டும்
சங்கொலியும்
கண்ணன் கைவசம்.

அநீதி ஆர்ப்பரித்த
அனர்த்த வினாடியில்
ஆயுதம் ஏந்த மறுத்த
அதே கரங்களில்
தேர்ச் சக்கரம்.

கண்ணன் இருக்குமிடம்
தர்மத்தின் இருப்பிடம் -
அங்கு
வெற்றி நிச்சயம்.
நன்றி: இந்துவின் சங்கொலி

No comments:

Post a Comment