Showing posts with label கவிமணி. Show all posts
Showing posts with label கவிமணி. Show all posts

Thursday, December 10, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்


பக்தியோடு தெய்வம் பணிந்திடுவோம், பாரதத்தாய்
சித்தங் களிப்படையச் செய்திடுவோம் - ஒத்துழைத்துப்
பெற்ற சுதந்திரத்தைப் பேணிடுவோம், பேருலகில்
நற்றவம் ஈதால் நமக்கு.

-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
(மலரும் மாலையும் - பக்: 189 )

Tuesday, November 17, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு- அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி.
அம்மா என்குது வெள்ளைப் பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.
நாவால் நக்குது வெள்ளைப் பசு - பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி.
முத்தம் கொடுக்குது வெள்ளைப் பசு - மடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி.

-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
(மலரும் மாலையும்/ பசுவும் கன்றும்/பக்:66 )

Tuesday, October 27, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

நாமே நமக்குத் துணையானால்
நாடும் பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடி வரும்
சற்றும் இதற்கோர் ஐயம்உண்டோ?...

கால நதியின் கதியதனில்
கடவுள் ஆணை கான்பீரேல்
ஞாலம் மீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே!
-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

Friday, September 25, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்

நாமே நமக்குத் துணையானால்
நாடும் பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடி வரும்;
சற்றும் இதற்கோர் ஐயம் உண்டோ?

நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு
நேயம் கொண்ட நெறியோர்க்கு
விஞ்சும் பொறுமை உடையவர்க்கு
வெல்லும் படைகள் வேறுளவோ?...

கால நதியின் கதியதனில்
கடவுள் ஆணை காண்பீரேல்,
ஞாலம் மீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே!


-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

(மலரும் மாலையும்)