Sunday, November 8, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

என் வாழ்க்கை நாடகத்தில்
எத்தனையோ காட்சிகள்
எத்தனையோ காட்சிகளில்
எழ முடியா வீழ்ச்சிகள்!...

அற்பர்களின் சந்தையிலே
அன்புமலர் விற்றவன்
அன்புமலர் விற்றதனால்
துன்பவிலை பெற்றவன்!

முட்புதரில் நட்புமலர்
முளைக்குமென்று நம்பினேன்
முளைத்துவந்த பாம்புகளே
வளைத்தபோது வெம்பினேன்!

நெஞ்சுவக்கும் மலர் பறிக்க
நெருப்பினில் கைவிட்டவன்
நெருப்பினில் கைவிட்டதனால்
நினைவுகளைச் சுட்டவன்!...
-கவிஞர் மு.மேத்தா
(கண்ணீர்ப் பூக்கள் -பக்: 51, 54)

2 comments:

தேவன் said...

நல்ல கவிதை நண்பரே.

வ.மு.முரளி. said...

thangal karuththukku nandri.

Post a Comment