Tuesday, November 17, 2009

மரபுக் கவிதை - 50



பூனை


பஞ்சென ஸ்பரிஸ மென்மை
பாலெனத் தூய வெண்மை.
துஞ்சுதல் அற்ற கண்கள்
தூய்மையை நாடும் உள்ளம்.
அஞ்சிடுமாறு கீறும்
ஆணியே நகங்களாகும்.
வஞ்சகம் அற்ற வாழ்வு
வாலிலே நடனமாடும்.
நஞ்சையும் ஜீரணித்து
நாவினால் அருகு மெல்லும்.
கொஞ்சிடு விறைத்த காது
கோபமோ உறுமும்போது.
சஞ்சலமின்றி வேட்டை
சாகசங் காட்டி ஓடும்.
வெஞ்சினம் வந்துவிட்டால்
வேங்கையாய்க் கூரும் பற்கள்.
ரஞ்சகமான தோற்றம்
ராகமாய்ப் பாடிக் கூவும்.
நெஞ்சிலே கொண்ட அன்பு
நேசமே பூனை ஆகும்.

.

No comments:

Post a Comment