Saturday, November 7, 2009

வசன கவிதை - 23


எதிர்காலம்?

இறந்தகாலம் இறந்துபோய் விட்டது;
நிகழ்காலம் நின்றுகொண்டு சிரிக்கிறது.

அறுவடையான நெல்லில்
கல் பொறுக்கி விற்றது போய்
ஆற்றங்கரைக் கல்லை
அரைத்துக் கலக்கும்
கல்நெஞ்சக் காரார்கள்.

விக்கிரகத்தை வணங்கி
வினைகளைத் தீர்த்தவர்கள்
விக்கிரகங்களையே இன்று
விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்த்த சாஸ்திரத்தை
அழகாய் விமர்சிப்பவர்கள்
தேர்தலில் மட்டும்
தேறாமல் போய்விடுகிறார்கள்.

நிகழ்காலம்
நின்றுகொண்டு சிரிக்கிறது;
எதிர்காலம்?
எழுதிய நாள்: 27.12.1987

No comments:

Post a Comment