Saturday, November 14, 2009

இன்றைய சிந்தனை



விவேக அமுதம்


தியாகம் செய்தேயாக வேண்டும். மகிமையுடனிரு. தியாகமின்றி எந்தப் பெரிய செயலையும் செய்ய முடியாது. இந்த உலகைப் படிக்கத் தன்னையே தியாகம் செய்தான் இறைவன். உங்கள் வசதிகள், இன்பங்கள், பெயர், புகழ், பதவி, ஏன், உங்கள் உயிரையே துச்சமென தள்ளி, மனித சங்கிலிகளால் பாலம் ஒன்று அமையுங்கள். அதன்மூலம் கோடிக் கணக்கான மக்கள் வாழ்க்கை என்னும் கடலைக் கடப்பார்கள்...

நான் எதிர்காலத்தைப் பார்க்கவில்லை, பார்க்க விரும்பவும் இல்லை. ஆனால் இதோ என் கண்முன் காணும் வாழ்க்கையைப் போல் தெளிவாக ஒரு காட்சியை என் முன் காண்கிறேன்- புராதனமான நமது அன்னை விழித்துவிட்டாள்; புத்திளமையுடன், என்றுமில்லா மகிமையுடன் அவளது அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். சமாதான வாழ்த்தொலியுடன் அவளை உலகெங்கிலும் பிரகடனம் செய்யுங்கள்.

-சுவாமி விவேகானந்தர்
(தமிழ்ப் பெருமக்களுக்கு/ ஞான தீபம்/ பக்:85)

No comments:

Post a Comment