Sunday, November 8, 2009

வசன கவிதை - 24


பிரிவின் துயரம்

பிரிவின்போது தான் தெரிகிறது
பிரிவின் துயரம்.
பிரிவோம் என்று தெரிந்திருந்தால்
இணையாமலாவது இருந்திருக்கலாம்;
இணைக்கப் பட்டோம்-
பிரிக்கப் படுகிறோம்.

இணக்கமும் பிணக்கமும்
இணை பிரியாதவை.
இணைந்திருந்தபோது
இரண்டையும் கண்டோம்.
பிரிகிறோம்-
பிணக்கும் இல்லை; இணக்கமும் இல்லை;
இது தான் விதியின் சதி.

கானல் நீரைக் கண்டவுடன்
ஓடும் பாலைவன நடப்பு
அல்ல நம் நட்பு.
அன்பினால் தான்
கட்டுண்டோம்-
அன்பை அழிக்க முடியாது.

தவறுகள் மனிதனுக்கு சகஜம்-
திருந்தாமல் வாழ்வது தான் தவறு.
நாம் திருந்தினோம்;
திருத்தினோம்; ஆனால்-
'திருத்துவோம்' என
சொல்லவிடாமல்
விதியே தவறு செய்தால்?

திருந்திக்கொள்ளும் என
எதிர்பார்ப்போம்;
காலம் வரும்-
காத்திருப்போம்.
குறிப்பு: பல்தொழில் பயிலகத்தில் படித்தபோது இறுதியாண்டில் எழுதியது (ஆட்டோகிராப்)
எழுதிய நாள்: 21.06.1988

No comments:

Post a Comment