Monday, November 16, 2009

மரபுக் கவிதை - 49


வேண்டுவன

மாதா,பிதா:

அடிமரம் இற்றபின் அதனுடைய விழுதுகள்
ஆலத்தைத் தாங்குதல் போல
வடிவினை உந்தனுக்கு ஈந்திட்ட பெற்றோரின்
முதுமையில் உதவிடல் வேண்டும்!

குரு:

நல்லவர் மிக்குயர் நிலையினை அடையினும்
நன்றியைக் காட்டுதல் போல
பல்கலை கற்றிட கல்வியை உதவிய
குருவினை மதித்திடல் வேண்டும்!

தெய்வம்:

அண்டங்கள் யாவையும் அவனுடைய பார்வையில்
ஆட்பட்டிருக்கின்றதன்றோ?
வண்டிலும் வள்ளிக் கிழங்கிலும் வாழ்ந்திடும்
வள்ளலை வணங்கிடல் வேண்டும்!
(எழுதிய நாள்: 04.06.1989)

No comments:

Post a Comment