Wednesday, November 4, 2009

மரபுக் கவிதை - 44

சகோதரா!

சகோதர பாசம் வளர்த்திடுவோம்!
சாதித்தீயை அனைத்திடுவோம்!

அண்ணன், தம்பிகள் அடித்துக்கொண்டு
அல்லல் படுவது இழிவய்யா!
அன்பை எங்கும் காட்டுங்கள்-
அனைவரும் ஒரு குலம் தானய்யா!

இறைவனின் பிள்ளைகள் நாமெல்லோரும்
இதிலே உயர்வு, தாழ்வென்ன?
குகனை அணைத்த ராமன் கதையை
குவலயம் முழுவதும் பரப்பிடுவோம்!

ஔவை முதலாய் பாரதி வரையில்
அனைவரும் சொன்னது ஒற்றுமையே!
நல்லவர், தீயவர் இரண்டே சாதி
நமக்குள் வேண்டாம் வீண் சண்டை!

குறிப்பு: தென் மாவட்டத்தில் நடந்த சாதிக் கலவரத்தின்போது எழுதியது.
நன்றி: விஜயபாரதம்
(23.01.1998)

No comments:

Post a Comment