Monday, November 23, 2009

புதுக்கவிதை - 44


இறைமை

நெடிதுயர்ந்த தென்னையின்
மிளிரும் கீற்றசைவில்
இறைமையின் தாண்டவம்.
அதனருகில் பாயென கிடக்கும்
பைம்பொழிலின் நுனிமென் நடனத்தில்
இறைமையின் குதூகலம்.
வரப்பில் நீர் பாய்ச்சும்
வெற்றுடம்பு முண்டாசுக் காரரின்
வியர்வையில் வெளிப்படும்
இறைமையின் உழைப்பு.


No comments:

Post a Comment