Thursday, November 5, 2009

புதுக்கவிதை - 37


அஞ்சலி

அவர் ஒரு மகான்;
சிறந்த தீர்க்கதரிசி;
இணையில்லாப்
பெருந்தலைவர்;
அவரது எண்ணங்கள்
எக்காலத்துக்கும்
ஏற்புடையவை;
முக்காலமும் உணர்ந்த
முனிவர் அவர்.
பிறந்த நாளிலேயே
இறந்துபோன
பெருந்தகை அவர்.

அவரது
இனிய நாளும்
நினைவு நாளும்
இணைந்த நாள்
விரைவில் வருகிறது.
உடனே அவருக்கு
சிலை எடுங்கள்;
மலர் வளையம் வையுங்கள்;
அஞ்சலி செலுத்துங்கள்.

கூடவே அவரது
கருத்துக்கள் அத்தனையும்
சிலைக்குக் கீழே
சமாதி ஆக்குங்கள்.
அவரை அப்போதே
மறந்துவிடுங்கள்!

No comments:

Post a Comment