Sunday, November 22, 2009

புதுக்கவிதை - 43


சிகிச்சை

தலைவலி போக
மாத்திரையை மட்டுமல்லாது
வயிற்று வலியையும் வாங்கி,
வயிற்று நோவுக்காக
வயிற்றை அறுத்து,
இப்போது
தையலில் வலி.
அலோபதியின்
கடைக்கண் பார்வையை
நினைக்குந்தோறும்
நரம்பில் ஊசி ஏறுகிறது.
நன்றி: விஜயபாரதம் (28.01.2000)

No comments:

Post a Comment