Thursday, November 5, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருத்தல் வேண்டும். இந்தப் பிறவியை ஏன் எடுத்தோம்? இதில் செய்து முடிக்க வேண்டிய கடமைகள் யாவை? இப்பிறவி முடிந்த பின் என்ன ஆகப் போகிறோம்? என்ற வினாக்கள் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தவறாமல் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள். இவற்றுள் இடைநின்ற கேள்வி தான் இன்றியமையாதது...
தனிப்பட்ட மனிதர்கள் இவ்வாறு குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்தால் ஒழிந்து போகட்டும் என்று விட்டு விடலாம். ஆனால் ஒரு சமுதாயமே இவ்வாறு மாறிவிட்டால் என்ன ஆகும்? விரைவில் அந்த சமுதாயம் அழிவது தவிர வேறு யாது?...
-பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்
(தேசிய இலக்கியம்- பக்: 51,52)

No comments:

Post a Comment