Thursday, November 5, 2009

மரபுக் கவிதை - 45


பிரயத்தன கீதம்


ஒரு கரத்தினிலே அங்குசம் - வே
றொரு கரத்தினிலே தாமரை- மற்
றொரு கரத்தினிலே மாம்பழம் - இன்
னொரு கரத்தினிலே முத்திரை.

விழிகளில் அறிவதன் தரிசனம் - மறம்
அழிந்திடும் சான்றென மூஞ்சுறு- அற
வழியினை எழுதிடத் தந்த முள்- தீப்
பழியினை நீக்கிடு அருள்மழை.

வளைகரத்தினிலே கமண்டலம் -சிறு
வளைபிறை நெற்றியின் மீதினில் - நாள்
வளைகுண்டலங்கள் காதினில்- முன்
வளைந்தது வயிறொரு பானையாய்

ஆதியும் அந்தமும் அற்றவர் -சம
நீதியில் உலகதன் ரட்சகர்- திரு
வேதிய நாயகன் கணபதி - பெயர்
ஓதிட ஓதிட இன்பமே!
நன்றி: விஜயபாரதம்
(05.09.1997)


No comments:

Post a Comment