Sunday, November 29, 2009

புதுக்கவிதை - 46



சாஸ்வத சமதர்மம்

எரிந்து கொண்டிருந்தது அது.
நேற்றுவரை அது
அவராக இருந்தது.
அவர் - கோடீஸ்வரர்.

அருகிலேயே
அதுவும் எரிந்தது.
இன்று காலை அது
அவனாக இருந்தது.
அவன்- அநாதை.

நாளை
இரு சவச் சாம்பல்களும்
மண்ணில் கலந்திருக்கும்.

வெட்டியான்
காத்திருக்கிறான் -
நாளை வரப் போகும்
பிணங்களுக்காக.
நன்றி: விஜய பாரதம் (06.11.1998)
.

No comments:

Post a Comment