Thursday, November 26, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


அடுத்த நபர் அவரது கொள்கையில் நிற்கட்டும். திருத்தவே முடியாத மகா முட்டாள்களும், நியாயத்தைப் பார்க்க வைக்க முடியாத பரம் மூடர்களும் இந்த உலகத்தில் உளர். உங்களது காலத்தையும் பிராணனையும் அவர்கள் விஷயத்தில் வீணாக்காதீர்கள். சோர்வு தான் மிஞ்சும்; பகைமை வளரும்...
இந்த உலகம் முழுவதும் பொய்யானது என்று நம்புங்கள். அனைத்து மகான்களும் ஒரே குரலில் திட்டவட்டமாக 'இந்த வியவாரிக உலகம் வெறும் கனவுலகமே' என்று கூறியுள்ளனர். அவர்கள், தாங்களே அனுபவித்து உணர்ந்த பிறகே, 'இந்த உலகம் அநித்யம் தூய உணர்வே நித்யம்' என்று கூறியுள்ளனர். அவர்கள் முட்டாள்கள் அல்ல; அல்லது நீங்கள் கெட்டிக்காரர்களும் அல்ல. கசப்பான அனுபவங்களை நீங்கள் அனுபவிக்கும்போது கூட, 'இதுவனைத்தும் பொய்யே; நான் தூய உணர்வு சொரூபி. நானே கடவுள்' என்று சொல்லுங்கள்.
- சுவாமி சிவானந்தர்

No comments:

Post a Comment