Thursday, March 4, 2010

உருவக கவிதை - 36


நித்யானந்தம் -1

நிதமும் ஆனந்தம்

கதவைத் திறந்து வையுங்கள் -
காற்று வரட்டும்!
சாளரங்களை மூடிய
திரைகளையும் நீக்குங்கள்!
விளக்கொளியும் நறுமணமும்
அறைக்குள் நிறையட்டும்!
அறைக்குள் இருப்பது
அனைவருக்கும் தெரியட்டும்!

கதவைத் திறந்திடுங்கள் -
காற்று வரட்டும்!
ரகசிய விருந்தாளிகளுக்கு
திறந்த அறைகளில் இடமில்லை!
ஒளிப்படக் கருவிகளை
ஒளித்துவைக்கத் தேவையில்லை!
ஆனந்தமாக இருங்கள்!
நிதமும்
ஆனந்தமாக இருப்பீர்கள்!

காண்க: கொசுறு/ (06.02.2010)- http://kuzhalumyazhum.blogspot.com/2010/02/29.html
.

No comments:

Post a Comment