Wednesday, March 10, 2010

வசன கவிதை - 49


தொல்லைக்காட்சி -2

அழையா விருந்தாளிகள்

கொடுமைக்காரி மாமியார்,
சபலிஸ்ட் மாமனார்,
சின்னப்புத்தி மைத்துனர்,
சின்னவீடு மைனர் அத்தான்,
கல்லூரியில் காதலிக்கும் தங்கை,
அழுமூஞ்சி அக்கா,
சாடிஸ்ட் சகலை,
வஞ்சம் தீர்க்கும் மருமகள்,
மனதில் கருவும் ஓரகத்தி,
சைக்கோ மருமகன்,
பழி வாங்கும் அண்ணி,
பல்லைக் கடிக்கும் மாமா,
சாபம் விடும் சம்பந்தி,
போதையேற்றும் தம்பி,
கோபக்கார அத்தை,
பரிதாப தாத்தா,
வாயாடி பாட்டி,
கள்ளக்காதலி அம்சா,
திருட்டு நண்பன் கம்சா...

எல்லோரும்
எல்லோர் வீட்டுக்கும்
அனுமதியின்றி வருகிறார்கள்-
தொலைக்காட்சி
நெடுந்தொடர்களில்...
.

No comments:

Post a Comment