Thursday, March 18, 2010

மரபுக் கவிதை - 83


இளைய ஆத்திசூடி - 1

01. அன்னையே தெய்வம்
02. ஆணவம் அகற்று
03. இனிமையைப் பேசு
04. ஈந்திடு உதவி
05. உழவே உலகம்
06. ஊழினை மறவேல்
07. எழுப்பிடு உறக்கம்
08. ஏக்கம் வேண்டா
09. ஐயம் அகற்று
10. ஒருமுகப்படுத்து
11. ஓதிடு வேதம்
12. ஔவை சொல் நில்
13. கசடினைப் போக்கு
14. காவியமாய் வாழ்
15. கிழமென இகழேல்
16. கீதையை கற்றிடு
17. குலப்புகழ் மறவேல்
18. கூழினைக் குடி
19. கெஞ்சுதல் தவறு
20. கேளிரை மதி
21. கைத்தொழில் பழகு
22. கொட்டம் அடக்கு
23. கோவென உயர்
24. கெளரவம் காத்து வாழ்.
.

No comments:

Post a Comment