Friday, March 12, 2010

புதுக்கவிதை - 79


இதுவும் கடந்து போகும்...

வீட்டைப் பெருக்கி
வீதியில் தள்ளியாயிற்று.
வீடு சுத்தமாயிற்று.
வீதி குப்பையாயிற்று.
தெருமுனைக் குப்பையை
வாகனத்தில் கடக்கலாம்;
நதியின் வீச்சம் தான்
குமட்டுகிறது.

வீட்டுக் கழிவுநீரே
சாக்கடை வாயிலாய்
நதியென நடமாடுவதால்
மூக்கைப் பொத்தியபடி
கடந்து விடலாம்.
ஆனாலும்,
நதிப்படுகையில்
ஆழ்குழாய்க் கிணறு
அமைத்த உள்ளாட்சிக்கு
சுயபுத்தியும் இல்லை.
சொந்த புத்தியும் இல்லை.
.

No comments:

Post a Comment