Sunday, March 21, 2010

மரபுக் கவிதை - 84


மதுவினை விலக்கு

மதுவினை அருந்திடின் மயக்கம் வந்திடும்;
மயக்கத்துடன் மமதை வரும்.
இதமாய்ப் பேசிடும் குணமும் குறைந்திடும்;
இடராய் இருப்பர் அனைவருக்கும்.
சதிகள் பலவும் செய்யத் தூண்டிடும்;
சங்கடங்கள் பலதேடி வரும்.
நிதமும் வீட்டில் சண்டைகள் வந்திடும்;
நினைவும் கூடத் தப்பிவிடும்.
மதுவினை உடனே விலக்கிட வேண்டும்-
மக்கள் மாண்புடன் வாழ்ந்திடவே!
.

No comments:

Post a Comment