Sunday, March 7, 2010

இன்றைய சிந்தனை


விவேக அமுதம்

துறவு அமைப்புகளில் நான் பெரிய நம்பிக்கை கொண்டவன் அல்ல என்பதையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவற்றில் நன்மைகள் உள்ளன; பெரும் குறைகளும் உள்ளன. துறவிகளுக்கும் இல்லறத்தார்களுக்கும் இடையில் சமநிலை ஏற்பட வேண்டும்...
துறவி அரசனை விட உயர்ந்தவன். காவி உடுத்த துறவியின் முன்னர் உட்காரத் துணிகின்ற மன்னன் இந்தியாவில் இல்லை. அவன் தனது ஆசனத்திலிருந்து எழுந்து நிற்கிறான். ஆனால் அது நல்லதல்ல. நல்லவர்களானாலும், மக்களுக்கு அரணாக இருந்து வருபவர்களேயானாலும், அவர்கள் கையில் இவ்வளவு அதிகாரம் இருப்பது சரியல்ல....
நீங்கள் ஓர் இல்லறத்தானாக இந்தியாவுக்கு சென்று மதத்தை போதியுங்கள். இந்துக்கள் அதைப் புறக்கணித்துவிட்டு அப்பால் போய்விடுவார்கள். நீங்கள் துறவியாக இருந்தால் அவர்கள், 'அவர் நல்லவர்; அவர் உலகத்தைத் துறந்தவர்; ; நேர்மையானவர்; சொல்வதைச் செய்ய முயற்சிப்பவர்' என்பார்கள். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், அங்கே துறவு என்பது ஒரு மாபெரும் சக்தியைக் குறிக்கிறது. நாம் செய்யக் கூடியது, அதனை மாற்றுவது மட்டுமே; அதற்கு வேறொரு வடிவம் கொடுப்பதே. இந்தியாவில் திரியும் துறவிகளிடம் உள்ள இவ்வளவு பெரும் சக்தி மாற்றப்பட வேண்டும். அது மக்களை உயர்த்தும்.
-சுவாமி விவேகானந்தர்.
(ஞானதீபம்- முதல் சுடர்- பக்: 22).

No comments:

Post a Comment