Monday, March 29, 2010

மரபுக் கவிதை - 89



நான்மறை


பாரத மண்ணின் பெருமைகள் மிக்குயர்
பண்பினை விளக்கிடு பத்திரம்.

சாரண ராயிரம் போற்றி வளர்த்திய
சக்தியை உரைத்திடு சந்ததி.

வீரம் விளைந்திடு சூரர்கள் காட்டிய
தீரம் திளைத்திடு ஓவியம்.

ஈரம் நெஞ்சினில் இனிது சுரந்திடும்
வளமையை வழ்ங்கிடு வார்ப்படம்.

சீர்பெற நாட்டினை ஆண்டருள் செய்தபல்
வேந்தர்கள் வழிமுறைக் காவியம்.

நீர், நிலம், தீயென, பாரினை ஐந்தெனப்
பகுத்திடும் இந்துவின் பட்டயம்.

பூரணமாயிட, புதுவழி இயம்பிடு
போதனை சாற்றிடும் பொக்கிஷம்.

பாரத மென்றும் பண்புடை நாடென
பாரினுக் குணர்த்திய வேதியம்.
.

No comments:

Post a Comment