Monday, March 22, 2010

மரபுக் கவிதை - 85


வாழும் வழி

நைவேத்தியம் செய்திட்ட அமுதின் மீதும்
தெருவோரம் வீற்றிருக்கும் புழுதி மீதும்
கைவைக்கும் ஈப்போல வாழ்ந்திடாதே;
கயவனென இவ்வுலகம் பழித்துச் சொல்லும்.

தாமரையில் மதுவுண்ணும் வண்டு என்றும்
அதைத் தவிர வேறெதுவும் தீண்டிடாது;
பூமறைக்கும் அவ்வண்டைஉலகம் போற்றும்-
புண்ணியனாய் வாழ்ந்திடுதல் நன்று, நன்று.

-ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசம் ஒன்றைத் தழுவியது.
.

No comments:

Post a Comment