Thursday, March 4, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

பிரமச்சரியம் என்கிற விரதம் மற்ற விரதங்களைப் போலவே மனம், வாக்கு, காயம் மூன்றிலுமே காக்கப்பட வேண்டும். கீதையில் எடுத்துக் காட்டியிருப்பது போல், உடலில் மாத்திரம் பிரமச்சரியத்தைக் காத்து, மனத்தில் காமத்தை வளர்த்தால் அது பயனற்ற முயற்சியாகும். உடலுக்கு அது நல்லதுமாகாது. மனம் சென்ற வழியில் உடலும் இன்றோ நாளையோ கட்டாயம் செல்லும். அசுத்தமான எண்ணங்களில் மனத்தைச் செல்லவிடுவது குற்றமாகும். நாம் எவ்வளவு முயன்றாலும் மனமானது தவறிச் செல்லப் பார்க்கும். அதை நாம் தடுத்துக் கொண்டே வர வேண்டும். முடிவில் வெற்றி அடைவோம்...

-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ- பக்:166)

No comments:

Post a Comment