Tuesday, March 30, 2010

புதுக்கவிதை - 83


பிம்பம்


கண்ணாடியில் தெரியும்
பிம்பத்தில்
கண்ணுக்குக் கீழே
கருவளையம்.
கூடவே
மீசையில் நரைமுடி.
திடுக்கிறது உடல்.

நரைமுடிக்கு
கருஞ்சாயமும்
கருவளையத்துக்கு
வெண்சாந்தும்
பூசியாகிவிட்டது.
ஆயினும் இளிக்கிறது
சாயம் போன கண்ணாடி-

தேய்ந்து போன
எலிப்பல்லைக் காட்டி!

.

No comments:

Post a Comment