
பிம்பம் 
கண்ணாடியில் தெரியும் 
பிம்பத்தில் 
கண்ணுக்குக் கீழே 
கருவளையம். 
கூடவே 
மீசையில் நரைமுடி.
திடுக்கிறது உடல்.
நரைமுடிக்கு 
கருஞ்சாயமும் 
கருவளையத்துக்கு 
வெண்சாந்தும் 
பூசியாகிவிட்டது.
ஆயினும் இளிக்கிறது 
சாயம் போன கண்ணாடி- 
தேய்ந்து போன 
எலிப்பல்லைக் காட்டி!
.

No comments:
Post a Comment