Thursday, March 25, 2010

மரபுக் கவிதை - 87


நாய்

நன்றிக்குச் சான்றாக ஞாலத்தில் வாழுகிறாய்
என்றிக்கும் அதிர்ந்திடவே ஏற்பாகக் குரைத்திடுவாய்
என்றைக்கும் வீட்டுக்குக் காப்பாக இருந்திடுவாய்
தன்னுயிரும் ஈந்திட்டு உடைமைகளைக் காத்திடுவாய்
நன்றிக்கு நாயகனாய், ஞாலத்தின் காவலனாய்
என்றைக்கும் வாழ்ந்திடுக - என்னன்பு நாய் நீயே.

.

No comments:

Post a Comment