Wednesday, March 3, 2010

மரபுக் கவிதை - 77


வெண்புறாக்கள் பறக்கட்டும்!


வெண்புறாக்கள் விண்ணில் பறக்கட்டும்!
வெந்திட வேண்டாம் இனியிந்த பூமி!

பிரம்மாஸ்திரமாம் அணுகுண்டிதனைப்
பிறந்திடச் செய்தோர் பிறகு வருந்த
கண்ணீர் கடலெனப் பொழிந்திட வேண்டாம்-
கவலைகள் தரும் இக்கடியது தீது!

ஜப்பான் தேசம் சாட்சியாய் நிற்க,
எப்போதிதனை அழித்திடுவோம் நாம்?
சிறகினை விரித்துச் சிட்டெனப் பறக்கும்
வெண்புறா கூறும்: வெந்திட வேண்டாம்!

அருளால் இறைவன் அளித்த உலகினை
அணுவால் நாமும் அழித்திடலாமா?
அஹிம்சை உடனே அடிப்படைத் தேவை!
அன்பால் உலகம் அமைத்திடுவோமே!

அணுவினை நல்ல ஆற்றலாய்க் கொள்வோம்!
அதனினைக் கொண்டே அதிசயம் புரிவோம்!
வெண்புறாக்கள் விண்ணில் பறக்கட்டும்!
வெந்திட வேண்டாம் இனியிந்த பூமி!
..

1 comment:

Anonymous said...

mikavum rasithaean

nandtri

Post a Comment