Showing posts with label இளைய ஆத்திசூடி. Show all posts
Showing posts with label இளைய ஆத்திசூடி. Show all posts

Thursday, March 18, 2010

இன்றைய சிந்தனைகள்







கருவூலம் - 1

1 . அறம் செய விரும்பு
2 . ஆறுவது சினம்
3 . இயல்வது கரவேல்
4 . ஈவது விலக்கேல்
5 . உடையது விளம்பேல்
6 . ஊக்கமது கைவிடேல்
7 . எண்ணெழுத்து இகழேல்
8 . ஏற்பது இகழ்ச்சி
9 . ஐயமிட்டு உன்
10 . ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12 . ஔவியம் பேசேல்
13 . அஃ கம் சுருக்கேல்...

- ஔவையார் (ஆத்திசூடி)
**********************
கருவூலம் - 2

1 . அச்சம் தவிர்
2 . ஆண்மை தவறேல்
3 . இளைத்தல் இகழ்ச்சி
4 . ஈகை திறன்
5 . உடலினை உறுதி செய்
6 . ஊண்மிக விரும்பு
7 . எண்ணுவது உயர்வு
8 . ஏறு போல் நட
9 . ஐம்பொறி ஆட்சி கொள்
10 . ஒற்றுமை வலிமையாம்
11 . ஓய்தல் ஒழி
12 . ஔடதம் குறை...
-மகாகவி பாரதி (புதிய ஆத்திசூடி)
.

மரபுக் கவிதை - 83


இளைய ஆத்திசூடி - 1

01. அன்னையே தெய்வம்
02. ஆணவம் அகற்று
03. இனிமையைப் பேசு
04. ஈந்திடு உதவி
05. உழவே உலகம்
06. ஊழினை மறவேல்
07. எழுப்பிடு உறக்கம்
08. ஏக்கம் வேண்டா
09. ஐயம் அகற்று
10. ஒருமுகப்படுத்து
11. ஓதிடு வேதம்
12. ஔவை சொல் நில்
13. கசடினைப் போக்கு
14. காவியமாய் வாழ்
15. கிழமென இகழேல்
16. கீதையை கற்றிடு
17. குலப்புகழ் மறவேல்
18. கூழினைக் குடி
19. கெஞ்சுதல் தவறு
20. கேளிரை மதி
21. கைத்தொழில் பழகு
22. கொட்டம் அடக்கு
23. கோவென உயர்
24. கெளரவம் காத்து வாழ்.
.

Wednesday, March 17, 2010

மரபுக் கவிதை - 82


இளைய ஆத்திசூடி - 2

25 . சரித்திரம் அறிக
26 . சாதிகள் இல்லை
27 . சிற்றினம் வேண்டா
28 . சீலம் பழகு
29 . சுதந்திரம் பேணு
30 . சூரனாய் மாறு
31 . செப்பம் செய்
32 . சேவையை நாடு
33 . சைனியமாக்கு
34 . சொப்பனம் நீக்கு
35 . சோதிடம் பயில்க
36 . சௌமியம் மிளிர்க
37 . ஞமனுக்கஞ்சு
38 . ஞானம் தேடு
39 . ஞிமிறென சேமி
40 . ஞொள்குதல் வேண்டா
41 . தகர்த்திடு தடைகள்
42 . தானம் நன்று
43 . திருப்பணி பல செய்
44 . தீயென ஒளிர்க
45 . துரத்திடு துயரம்
46 . தூஷணம் பாவம்
47 . தெளிவே தேவை
48 . தேசம் நாமே
49 . தைவதம் போற்று
50 . தொன்மையை நினை
51 . தோஷம் போக்கு.
.

Tuesday, March 16, 2010

மரபுக் கவிதை - 81


இளைய ஆத்திசூடி - 3

52. நம்பிடு தெய்வம்
53. நாத்திகம் நறுக்கு
54. நியமம் தவறேல்
55. நீதி நிலைக்கும்
56. நுழைபுலம் வழங்கு
57. நூல்கள் இயற்று
58 நெடுமொழி பேசேல்
59. நேர்மை தவறேல்
60. நைச்சியம் ஒதுக்கு
61. நோய் வலுவழிக்கும்
62. பகர்ந்திடு உண்மை
63. பாவம் கொடிது
64. பிரணவம் ஓது
65. பீடு உயர்த்து
66. புதுமைகள் நிகழ்த்து
67. பூஷிதம் போதும்
68. பெயரினை நாட்டு
69. பேதமை ஓட்டு
70. பொறுத்தவர் வெல்வர்
71. போதனை செய்க
72. பௌதிகம் அறிக
.

Monday, March 15, 2010

மரபுக் கவிதை - 80


இளைய ஆத்திசூடி - 4

73. மமதை அடக்கு
74. மாதவனாய் வாழ்
75. மிஞ்சுதல் வேண்டா
76. மீட்டிடு மாட்சி
77. முதுமையை மதி
78. மூதுரை மறவேல்
79. மெத்தவும் விரும்பேல்
80. மேனியைக் கருது
81. மையலை விலக்கு
82. மொழியினைப் பற்று
83. மோகத்தைக் கொல்
84. மௌனம் ஞானம்
85. யவனரைத் துரத்து
86. யாகம் பல செய்
87. யுவனை எழுக
88 . யூகம் விரும்பு
89. யோகம் வேண்டு
90. யௌவனம் மாறும்.

Sunday, March 14, 2010

மரபுக் கவிதை - 79


இளைய ஆத்திசூடி - 5

91.வடமொழி பயில்க
92.வாகைகள் சூடு
93.விரயம் அழிக்கும்
94.வீறுடன் கிளம்பு
95.வெப்பினை நீக்கு
96.வேகம் குறை
97.வைதிகம் பரப்பு
98.வௌவுதல் வேண்டா
99. எஃகென ஒளிர்க
100.வக்கிரம் ஒடுக்கு
101.சங்கீதம் பாடு
102.இச்சை அடக்கு
103.அஞ்சுதல் இழிவு
104.பண்பினை மாற்றேல்
105.தத்துவம் பேசு
106.தொய்ந்திடல் தோல்வி
107.கள்ளினை விலக்கு
108.சற்குரு வணங்கு
109.வென்றிடு உலகம்.


***


ஏதேதோ எண்ணங்கள்


இளைய ஆத்திசூடி -
அருஞ்சொற் பொருள்:
(கடினமான சொற்களுக்கு மட்டும் )

ஊழ்: விதி
ஐயம்: சந்தேகம், பயம்
கசடு: குற்றம்
கோ: அரசன்
கெளரவம்: மானம்
சிற்றினம்: தீயோர் சேர்க்கை
சீலம்: ஒழுக்கம்
சைனியம்: படை
சௌமியம்: அமைதி
ஞமன்: யமன்
ஞிமிறு: தேனீ
ஞொள்குதல்: சோம்புதல்
தூஷணம்: நிந்தித்தல்
தைவதம்: தெய்வம்
நுழைபுலம்: நுண்ணறிவு
நைச்சியம்: தாழ்மை
பீடு: பெருமை
பூஷிதம்: அலங்காரம்
மேனி: உடல்நலம்
மையல்: மயக்கம்
யவனர்: அயலார்
விரயம்: வீண்செலவு
வெப்பு: உடற்சூடு
சற்குரு: ஞானாசிரியன்.