Showing posts with label தொலைக்காட்சி. Show all posts
Showing posts with label தொலைக்காட்சி. Show all posts

Thursday, March 11, 2010

வசன கவிதை - 50


தொல்லைக்காட்சி - 3

எதற்கு வீண் செலவு?

வன்முறை,
பாலியல் கட்சிகள்,
வக்கிரம்
மிகுந்துவிட்டது
திரைப்படம்.
அதனால் குடும்பத்துடன்
திரையரங்கு செல்வதே இல்லை
நாங்கள்-
அது தான் வீட்டிலேயே
இருக்கிறதே தொலைகாட்சி.


.

Wednesday, March 10, 2010

வசன கவிதை - 49


தொல்லைக்காட்சி -2

அழையா விருந்தாளிகள்

கொடுமைக்காரி மாமியார்,
சபலிஸ்ட் மாமனார்,
சின்னப்புத்தி மைத்துனர்,
சின்னவீடு மைனர் அத்தான்,
கல்லூரியில் காதலிக்கும் தங்கை,
அழுமூஞ்சி அக்கா,
சாடிஸ்ட் சகலை,
வஞ்சம் தீர்க்கும் மருமகள்,
மனதில் கருவும் ஓரகத்தி,
சைக்கோ மருமகன்,
பழி வாங்கும் அண்ணி,
பல்லைக் கடிக்கும் மாமா,
சாபம் விடும் சம்பந்தி,
போதையேற்றும் தம்பி,
கோபக்கார அத்தை,
பரிதாப தாத்தா,
வாயாடி பாட்டி,
கள்ளக்காதலி அம்சா,
திருட்டு நண்பன் கம்சா...

எல்லோரும்
எல்லோர் வீட்டுக்கும்
அனுமதியின்றி வருகிறார்கள்-
தொலைக்காட்சி
நெடுந்தொடர்களில்...
.

Tuesday, March 9, 2010

வசன கவிதை - 48


தொல்லைக்காட்சி - 1

விருந்து

தாத்தா, பாட்டிக்கு
சீரியல்கள்...
அம்மா, அப்பாவுக்கு
மூவி சானல்கள்...
தம்பி, தங்கைகளுக்கு
பதிவிறக்கம் செய்யப்பட்ட
பாடலகள்...
குழந்தைகளுக்கு
கார்ட்டூன் சானல்கள்..
அவரவர் அறைகளில்
அவரவர் விருப்பங்கள்...
வீட்டுக்கு வந்த விருந்தினர்
வரவேற்பறையில்
தூர்தர்சன் செய்தி
பார்த்தபடி...
.