Friday, February 19, 2010

உருவக கவிதை - 31


முடியவே முடியாது...

கணக்குப் பார்த்தால்
கடமையாற்ற முடியாது.
கணக்கு கேட்டால்
கட்சி நடத்த முடியாது.

கலைத்துறையை மறந்தால்
கலைஞனாக முடியாது.
கண்ணியமாய் நடந்தால்
களத்தில் வெல்ல முடியாது.

அத்து மீறாமல்
ஆட்சி நடத்த முடியாது.
கட்டுப்பாடு காக்காமல்
குடும்பம் காக்க முடியாது.

தத்துவம் பேசாமல்
தரணி ஆள முடியாது.
கொள்கைகளைக் கடைபிடித்தால்
கோட்டை கட்ட முடியாது.

தொண்டர்களை உசுப்பாமல்,
பங்கு பிரிக்காமல்,
முதுகில் குத்தாமல்,
தலைவனாக முடியாது.
.

1 comment:

தமிழ் said...

உண்மை தான்

Post a Comment