Thursday, February 4, 2010

புதுக்கவிதை - 70



அன்பெனப் படுவது...

ஆயிரம் கல்
தொலைவில் இருந்தாலும்
இதயங்கள்
அருகருகே இருப்பது.

பத்து நிமிடம்
பார்க்காமல் இருந்தாலும்
பரிதவித்துப் போவது.

ஒருவர் வலியை
உணராமலேயே
இன்னொருவர் துடிப்பது.

தன்னலம் மறுத்து
பிறர்நலம் விழைவது.
பயன் கருதாத
அறமாய் விளைவது.

அன்பெனப்படுவது...
இல்வாழ்க்கையன்றி
வேறெது?

இக்கவிதை, என் சகதர்மிணியும், வாழ்க்கைத் துணைநலமுமான ராதிகாவுக்கு சமர்ப்பணம்.

.

No comments:

Post a Comment