Wednesday, February 24, 2010



சான்றோர் அமுதம்

இந்தியாவை நகரங்களில் அல்ல, அதன் கிராமங்களில் தான் காண வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதையே எண்ணற்ற தடவைகள் திரும்பத் திரும்பக் கூறி வந்திருக்கிறேன். ஏழை மக்களுக்கு உணவும் உடையும் போதுமான அளவுக்குக் கிடைக்கிறதா என்றும், வெய்யிலிலும் மழையிலும் ஒதுங்க ஒரு கூரையாவது உண்டா என்றும் நாம் ஒருபோதும் நின்று விசாரித்ததில்லை.
இந்தச் சீரழிவை எவ்வாறு தடுத்து நிறுத்துவது? எல்லோரும் இன்னலின்றி வாழக்கூடிய அளவுக்கு இந்திய கிராமங்களை உருவாக்குவதே நாட்டை நேசிக்கும் அனைவருடைய பணி.

-மகாத்மா காந்தி
(நன்றி: எண்ணங்களின் சங்கமம் - 2008; பக்:250 )

நண்பரும் ஓவியருமான, 'எண்ணங்களின் சங்கமம்' அமைப்பின் நிறுவனர்
திரு. ஜெ. பிரபாகர் அவர்களுக்கு இது சமர்ப்பணம்.

.

No comments:

Post a Comment