Sunday, February 28, 2010

உருவக கவிதை - 34


முட்டுச்சந்து

கால் போன போக்கில்
நடந்தாலும் சிலநேரம்
வீடு வந்துவிடுகிறது.
தெளிவான முகவரியுடன்
தேடினாலும் சிலநேரம்
முட்டுச்சந்துகளில்
தத்தளிக்க வேண்டியிருக்கிறது.
ஆங்காங்கே சிலநேரம்
காதை விறைக்கும்
தெருநாய்கள்.
சாலைகளின் அலைகடலில்
பாய்மரம் கிழிகிறது.
துடுப்பு வலித்து
துவண்டுபோகிறது
வாழ்க்கை.
கால் போன போக்கில்
கடந்துபோகிறது -
செல்லவேண்டிய
இலக்கு.
.

No comments:

Post a Comment