Friday, February 5, 2010

உருவக கவிதை - 28




ஓணான்

பார்வை

முதுகுச் செதில்களை சிலுப்பியபடி
ஓரக் கண்ணால் பார்க்கும்
ஓணானின் பார்வையே
சரியில்லை...

அதன் குரல்வளை அருகில்
அசையும் தசைகளில்
ஒடுங்கிக் கிடக்கும் குரலில்
வேண்டுகோளும் இருக்கலாம்.
ஆனால்
பார்வை சரியில்லை....

மரத்தை வெட்டப் போகும் மனிதன்
பார்ப்பது போல,
வெறித்துப் பார்க்கும் ஓணானின்
பார்வை எனக்குப்
பிடிக்கவே இல்லை.

ஒருவேளை....
மரத்தை வெட்ட வந்தவன் என்று
நினைத்துவிட்டதா என்னை?


.

No comments:

Post a Comment