Sunday, February 21, 2010

மரபுக்கவிதை - 75


வெள்ளமும் வெல்லமும்

மலையுள கற்களைப் புரட்டி, பல
மரங்களை வேரொடு பெயர்த்து, சுழல்
அலைமிக வெண்நுரை திரள, இரு
கரைகளும் தழுவிடும் வெள்ளம்!

கண்ணலைச் சாறெனப் பிழிந்து, பெருங்
கலத்தினில் ஊற்றிய பின்னர், எரி
வண்ணமாய்க் காய்ச்சிய பாகை, சிறு
அச்சினில் ஊற்றிட வெல்லம்!


ஒலிநயத்தாலே ஒன்றாய் ஆயினும்
ஓரெழுத்து அதனால் இருபொருளுண்டு!
லியது பொருளே! ழியொரு எழுத்தே!
விழைவில்லாவிடின் விளைவே இல்லை!
.

No comments:

Post a Comment