Saturday, February 27, 2010

மரபுக் கவிதை - 76


வற்றி விடுமோ?

இன்னூற்று வற்றிவிடுமோ? இந்த
இதயத்தில் பீறிடு நல்
இனிமை மிகு கவிதைகளின்
இன்னூற்று வற்றிவிடுமோ?

மண்நீட்ட மனிதரோ நான்? இந்த
மண்ணகத்து மனிதரிடை
மணியான எம் புலமை
மண்ணுள்ளே மடியுமாமோ? அன்றி
தன்னோக்கு வடிவு தாமோ? இந்தத்
தடைகளைத் தகர்த்தெறியத்
தயங்காத மொழிக்கோவைத்
தன்மையின் தரகு தாமோ?

விண்ணாக்க விதிகள் தாமோ? இந்த
விந்தைக்கும் விந்தை மிகு
வியப்பான சொல்லமுத
விண்ணூற்று விளைவு தாமோ? எனின்
நன்னூற்றுப் புலவர் தாமே - இந்த
நயமிக்க கேள்விகளின்
நலமான பதில்கள் சொலி
நன்னூக்கம் நல்குவீரே!
.

No comments:

Post a Comment