Sunday, February 7, 2010

வசன கவிதை -43


பிசிறு

தந்தையின் சீற்றம்
தாயின் கண்ணீர்
மனைவியின் ஊடல்
குழந்தையின் சீராட்டு
தங்கையின் தவிர்ப்பு
தமக்கையின் கோபம்
உறவினரின் பொய்ச்சிரிப்பு
ஊழியரின் அசிரத்தை
அதிகாரியின் கடுத்த முகம்
அன்பர்களின் ஏமாற்றம்
நம்பியவரின் கைவிரிப்பு
நண்பரின் பாராமுகம்
தோழனின் மறுதலிப்பு
தோல்விகளின்
தொடர்கதையாய்...
என்னிடத்தில் தான் தவறு
எங்கோ நடந்திருக்கிறது பிசகு.

.

No comments:

Post a Comment