Thursday, February 25, 2010

உருவக கவிதை - 33


நீரூற்றுப் பேனா

பாவாடை, தாவணி போல
வழக்கொழிந்துவிட்டது
நீரூற்றுப் பேனா.
எங்கு பார்க்கினும்
சுடிதார் போல
பந்துமுனைப் பேனாக்கள்.

கையை மையாக்கும்,
அடிக்கடி முனை உடையும்
சிக்கல் இல்லை எனினும்,
எழுத்தின் அழகுக்கு
நீரூற்றுப் பேனாவே உத்தமம்.

தேர்வுகளிலும் கட்டாயமாகிவிட்டது,
கல்லூரிகளில் இயல்பாகிவிட்ட
பந்துமுனைப் பேனா.
எனினும் ஒருகாலத்தில்
தடை விதிக்கப்பட்டிருந்த
குப்பை தானே இது?

.

No comments:

Post a Comment