Monday, February 1, 2010

புதுக்கவிதை -69


அமர்க்களம்

எதைப் பற்றியும்
பகடி செய்யலாம் -
பிரமுகரானால்.

எதைப் பற்றியும்
விமர்சித்து மகிழலாம் -
அறிவுசீவியானால்.

என்ன வேண்டுமாயினும்
எழுதிக் கிழிக்கலாம் -
பத்திரிகை நடத்தினால்.

யாராய் இருப்பினும்
மிரட்டி வளைக்கலாம் -
அதிகாரம் இருந்தால்.

ஆடை அவிழினும்
ஆர்ப்பரிக்கலாம்-
ஆணாய்ப் பிறந்தால்.

.

No comments:

Post a Comment