Thursday, December 31, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

புல்நுனிமேல் நீர்போல நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான் கேள்அலறச்
சென்றான் எனப்படுதலால்.
-நாலடியார்
(யாக்கை நிலையாமை - 29)
பொருள்:
ஒருவன் இப்பொழுது நின்று கொண்டிருந்தான்; உட்கார்ந்தான்; படுத்தான்; உறவினர் அழ இறந்தான் என கூறப்படுவது தான் வாழ்க்கை. புல்நுனி மீதிருக்கும் பனித்துளி போன்றதே இந்த வாழ்க்கை என்பதை உணர்ந்து, இப்பொழுதே அறவினைகளைச் செய்க!
.

No comments:

Post a Comment