Friday, December 4, 2009

மரபுக் கவிதை - 53



வாழ்க திலகர் நாமம்!


பாலன் என்றிட பறங்கியர் பதறுவர்!
கங்கா தரனென கயவரும் கலங்குவர்!
திலகர் என்றிட தீயவர் ஒதுங்குவர்!
அவரே அன்னையின் விலங்கை வளைத்தவர்!

கீதையின் ரகசியம் கீழ்மையை எதிர்ப்பது;
அடிமைத்தனமே கீழ்மையின் மறுபெயர்!
என்பது இவரது தத்துவ தரிசனம்!
அஞ்சா நெஞ்சம் திலகரின் தனிக்குணம்!

'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என
சுள்ளென உறைக்கும் வகையினில் உரைத்தவர்!
உரிமையைப் பேணிட யாசகமா வழி?
உதையே நல்வழி என கர்ஜித்தவர்!

வீட்டினில் வசித்த விக்னேஸ்வரர்களும்
வீதியில் வலம் வர வித்தினை இட்டவர்!
தமிழ்க்கவி பாரதி குருவாய் ஏற்றவர்!
தாய் பாரதியின் தவத்தால் உதித்தவர்!
நன்றி: சுதேசி செய்தி (ஜூலை - 2009 )

No comments:

Post a Comment