Thursday, December 3, 2009

வசன கவிதை - 30


பயணங்கள் முடிவதில்லை

ஓட்டுனர் மீதான நம்பிக்கையில்
பேருந்தில் நிம்மதியான தூக்கம்;
தண்டவாளம் மீதான உறுதிப்பாட்டில்
சுகமான ரயில் பயணம்;
விமானம் குறித்த விதிகளின் வழியே
வானில் சாகச சிறகடிப்பு;
அலைகளையும் காற்றையும் நம்பி
கடலில், கப்பலில் யாத்திரை.

நம்பிக்கைகள் மட்டுமல்ல -
பயணங்களும் பலவிதம்.
எல்லாவற்றையும் மீறி
எப்போதாவது
நடந்துவிடுகிறது விபத்து.

ஓட்டுனரின் தூக்கமும்
பெயர்ந்த தண்டவாளமும்
செயலிழக்கச் செய்த மின்னலும்
கவிழ்த்துப் போட்ட பனிப்பாறையும்
எப்போதாவது
விதிவசமாகி விடுகிறது.
அதையும் மீறி -
அதே வாகனங்களில் பயணிக்காமல்
தவிர்க்கும் வாய்ப்புண்டு.

ஆயினும் மிதிவண்டி மோதலால்
மருத்துவமனை ஏகலாம்.
எதுவும் யாரிடமும் இல்லை;
இப்போதைக்கு உறங்கு.
விழித்தால் நாளை விவாதிக்கலாம்.
-

No comments:

Post a Comment