Wednesday, December 2, 2009

மரபுக் கவிதை - 52



முருகா!

சரவண முருகா சண்முகனே - என்
சங்கடம் தீர்க்கும் திரு முருகா!
பரமேஸ்வரனின் மைந்தா - பக்தர்
பல்குறை நீக்கும் பழநியப்பா!
பிரம்மனின் செருக்கினை அழித்தவரே - என்
சிந்தைத் தெளிவை அளித்தவரே!
தரணியில் தீமை களைந்திடவே - நீ
சூரனை அழித்து மகிழ்வித்தாய்!
கரங்கள் பனிரெண்டுடையவரே -சிவ
அம்பிகை பாலா, ஆறுமுகா!
சரணம் சரணம் உன்பாதம் - நீ
அருள் கூர்ந்தென்னை ஆட்கொள்வாய்!

எழுதிய நாள்: 28.06.1987

No comments:

Post a Comment