Tuesday, December 22, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்

உறக்க நேரத்தைப் பற்றிப் பலதிறக் கருத்து வேற்றுமைகள் உண்டு. சிலர் எட்டு மணிநேரம் என்பர்; சிலர் ஆறு மணி நேரம் என்பர்; சிலர் நான்கு மணி நேரம் என்பர். எட்டு மணிக்கு மேல் போகாமலும், நான்கு மணிக்குக் குறையாமலும் உறங்குவது நலம். ஆறு மணி நேரம் மிகப் பொருத்தம். நேரம் அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவண்ணம் அமையும். உறக்கம் இடை இடை இடர்ப்படல் ஆகாது. அவ்விடரால் பல கேடுகள் விளையும். இரவு பத்து மணிக்குப் படுத்து, வைகறை எழுவது இனிது.
-திரு.வி.கல்யாணசுந்தரனார்
(பெண்ணின் பெருமை- பக்: 88)
.

No comments:

Post a Comment