Wednesday, December 30, 2009

ஏதேதோ எண்ணங்கள்


வெற்றிகரமான 120வது நாள்!

'குழலும் யாழும்' வலைப்பூ துவங்கி இன்றுடன் 120நாட்கள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை மரபுக் கவிதைகள் (60), புதுக்கவிதைகள் (59), வசன கவிதைகள் (35), உருவக கவிதைகள் (17), மொழிமாற்றக் கவிதைகள் (6), படக்கவிதைகள் (1) என மொத்தம் 178 கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நான்கு மாதங்களில் வலைப்பூவை செறிவாக்க கொடுத்த கவனத்தை, விளம்பரப்படுத்துவதில் காட்டவில்லை என்பதை, நண்பர்களது கருத்துகள் மூலமாக உணர்கிறேன். வரும் மாதங்களில், உங்கள் ஒத்துழைப்புடன் இந்த வலைப்பூவை பிரபலப்படுத்த முடியும் என நம்புகிறேன்.

120வது நாளின் வெற்றியாக 'பஞ்சபூத வணக்கம்' என்ற (மூன்றாவது) புதிய வலைப்பூவை துவக்குகிறேன். அதையும் படித்து உங்கள் ஆலோசனைகளை தெரியப்படுத்துங்கள்!

புதிய வலைப்பூ முகவரி: http://panjaboothavanakkam.blogspot.com/
-வ.மு.முரளி

No comments:

Post a Comment