Sunday, December 13, 2009

புதுக்கவிதை - 52


ஹைகூ கவிதைகள் -1

காயப்படுத்தியவனுக்கும்
பால் வார்த்தது
ரப்பர் மரம்.

நாளை பறிக்கவிருந்த
கொய்யாக்கனியை
இன்றே கடித்தது அணில்.

அநாதையாய்க்
கிடக்கிறது
அறுந்துவிட்ட செருப்பு.

சிறுநீரகம்
தானம் செய்தார்
இருகண்ணும் இல்லாதவர்.

முதலில் திகைப்பு
இடையில் இணைப்பு
கடைசியில் ஹைக்கூ.
நன்றி: விஜயபாரதம் (18.09.1998)

No comments:

Post a Comment