Monday, December 21, 2009

வசன கவிதை - 31


ஜனனியின் ஜனனம்

இருட்குகையிலிருந்து
விடுபட்ட மகிழ்வில்
வீறிடும்
சிசுவின் அழுகை
அனைவருக்கும் ஆனந்த கீதம்.
ஏனெனில் அது -
வாழ்க்கைத் துடிப்பு;
வாழ்வின் துவக்கம்;
ஞானத்தைத் தேடும் பயணத்தின்
முதற்காலடி.

ஜனனம் -
இயற்கையின் தூண்டுதல்;
முயற்சியின் விளைவு;
தவத்தின் பலன்.
அதனால்தான்
ஜனனியின் ஜனனம்
மற்றெல்லாவற்றையும் விட
மகிழ்வூட்டுகிறது.

ஜனனத்தின் பொருள்
வாழ்வின் பெருமை.
இந்த ஜனனியின் பெருமையும்
காலத்தால் அறியப்படட்டும்.
கடவுள் அதற்கு
துணையாக நிற்கட்டும்!
வெளியான நாள்: 19.11.1999; ஜனனி சிற்றிதழ்.
குறிப்பு: மங்கலம்பேட்டையில் இருந்து, நண்பர் செந்தில் குமார் வெளியிட்ட 'ஜனனி' மாத சிற்றிதழுக்கு எழுதிய வாழ்த்துப்பா இது.
.

No comments:

Post a Comment