Sunday, August 22, 2010

வசன கவிதை - 75




பாமர மனிதர்கள்...





பாலக்காடு -பிளிச்சிமடாவில்
நிலத்தில் புதைத்த
கோலா கழிவுகள்;


கோவை -காரமடையில்
கப்பலில் வந்த
அமெரிக்க குப்பைகள்;


பொள்ளாச்சி அருகே
சாலையில் கொட்டிய
தோல் கழிவுகள்;


பல்லடம் அருகே
வாய்க்காலில் வீசிய
செத்த கோழிகள்;


நொய்யல் நதியில்
வண்ணமாய்ச் சேரும்
சாயக்கழிவுகள்;


ஈரோடு அருகே
இரவில் திறந்துவிடப்படும்
தொழிற்சாலையின் நெடி;


நீர், நிலம், காற்றில்
விஷத்தை விதைத்து
விளையாடும் 'புள்ளிகள்';


சாயம் கலந்த தேநீர்க்கடையில்
போபால் செய்தியை
படிக்கும் மக்கள்;


அமெரிக்க கனவுடன்
கோழிக்கறி தின்று கோலா குடிக்கும்
வண்ணஆடை அணிந்த பாமர மனிதர்கள்...
.

No comments:

Post a Comment